தமிழ் சினிமாவில் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். ஜவான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் அனிருத் பாபுலர் ஆகியுள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அனிருத் உலகம் முழுவதும் பயணித்து ரசிகர்களுக்காக கச்சேரிகள் நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் அனிருத் மேடையில் பாடிக்கொண்டிருந்த போது ரசிகர்கள் அன்பு மிகுதியால் அவர் மீது பொருள்களை தூக்கி வீசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் அதை கூலாக எடுத்துக் கொண்டு அந்த பொருட்களை கையாள் பிடிக்க முயற்சித்துள்ளார். பொருட்களை வீசிய ரசிகர்களின் செயலை பலரும் கண்டித்து உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.