நடிகர் அருள்மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழில் அழகின், தென்றல் மற்றும் தாண்டவக்கோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரை துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.