தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையின் காரணமாக மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை தாம்பரம் – நெல்லை இடையே, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி தாம்பரத்தில் இருந்து நேற்று மாலை 5:00 மணிக்கு புறப்படுள்ள ரயில், சனிக்கிழமை(இன்று) அதிகாலை 4:15 மணிக்கு, நெல்லைக்கு வந்தடையும்.

நெல்லையில் இருந்து, இன்று  12ஆம் தேதி மாலை 5:50 மணிக்கு புறப்படும் ரயில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் முக்கிய நிலையங்களில் நிற்கும்.