மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தவெகவின் 2வது மாநில மாநாட்டில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் கலந்து கொண்ட விஜய், மேடையிலிருந்து ரேம்ப் வாக் வந்தபோது, ஒரு தொண்டர் தடுப்பை மீறி ரேம்பில் ஏற முயற்சி செய்தார். இதைக் கண்ட பவுன்சர்கள் அச்சம்பவத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த நபரை தூக்கி ரேம்பில் இருந்து கீழே வீசியது, அங்கிருந்த பலரும் அதிர்ச்சி அடைவதற்கே காரணமானது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், விஜய் அந்த தொண்டரிடம் நேரில் ஆவலுடன் நெருங்கி, பவுன்சர்களிடம் சத்தமாக எதையோ கூறும் காட்சியும் காணமுடிகிறது.
இந்த வீடியோவை பார்த்த தொண்டர்கள், “பவுன்சர்கள் எதையும் புரிந்து செய்யாமல் செயல்பட்டாலும், விஜய் அண்ணா தொண்டர்களிடம் எப்போதும் கருணையுடன் தான் நடந்து கொள்கிறார்” என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிகழ்வு, விஜய்யின் திடீர் எதிர்பாரா தாக்குதல் நடத்தப்பட்டாலும் தொண்டர்களிடம் கனிவு நிறைந்த அக்கறையையும் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
ரசிகன் மேல கை வச்ச உடனே திட்டிட்டார் தலைவர் ஓரம் போ ஓரம் போ .
ரசிகன் மேல உயிரே வச்சி இருக்கார் டா அவரு ❤️ pic.twitter.com/Ng9lWqQvsT
— RamKumarr (@ramk8060) August 22, 2025
“>
