இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்றுவரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தரப்பில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இஸ்ரேலில் இருந்து பணய கைதிகளை காசாவிற்கு கொண்டு வருபவர்களுக்கு பத்தாயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 8 லட்சம் ரூபாய் சன்மானமும் ஒரு வீடும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த காணொளியில் பயங்கரவாதி ஒருவர் கூறுகையில் பணய கைதி ஒருவரை அழைத்து வரும்போது அவரது நாய் வெளியில் வந்ததாகவும் அதனை தான் சுட்டுக் கொன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.