இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி போர் தொடங்கியது. இன்று வரை 18 நாட்களாக இரண்டு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் காசாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 117 குழந்தைகள் உட்பட 266 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.