சீனாவின் டிசிங்டாவோ நிறுவனம் தான் அந்நாட்டின் மிகப்பெரிய பீர் நிறுவனம் ஆகும். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பீர் டேங்கில் சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த காணொளிக்கு கலவையான கருத்துக்கள் குவிந்து வருகிறது.