இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 19 நாளாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை காசா முனை மீது தொடங்க தயாராக உள்ளது. இதனால் காசாவின் எல்லை பகுதியில் தங்கள் படைகளை அதிக அளவில் இஸ்ரேல் குவித்து வைத்துள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொள்ள காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் உடனடியாக தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. அதாவது வடக்கு காசாவில் கடுமையான தாக்குதலை மேற்கொள்ள இருக்கிறோம். எனவே அப்பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெற்கு காசாவுக்கு சென்று விடுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.