ஈரோடு மாவட்டத்தில் கிலோவில் தங்கம், வெள்ளி மற்றும் கோடிகளில் டௌரி வாங்கிய கணவன் அதுவும் பத்தல என மனைவிக்கே தெரியாமல் கணவன் 2ம் கல்யாணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், யுத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சீதனமாக 200 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி, 10 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யு கார் வாங்க 75 லட்ச ரூபாய் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். இந்நிலையில், டௌரி பத்தல என மனைவிக்கே தெரியாமல் கணவன் 2ம் கல்யாணம் செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.