கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்நிலையில் கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் PM மோடி.

விபத்து குறித்து ட்வீட்டில், ‘விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக CM ஸ்டாலின் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 அறிவித்திருந்தார்.