2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இருக்கும் சிறு சேமிப்பு திட்டங்களில் முக்கியமான மாற்றங்களுடன் 2023 பெண்களுக்கான மகிலா சாம்மான் சேவிங் சர்டிபிகேட் என்னும் புதிய சிறுசேமிப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.

மகிலா சம்மான் சேவிங் சர்டிபிகேட் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா இடையே உள்ள வேறுபாடு என்ன.?

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக சிறு டெபாசிட் திட்டமாகும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடு செய்வதற்கு தகுந்தார் போல் உள்ளது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.6 ஆகும். 10 வயது வரையிலான பெண் குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம்.

மகிலா சம்மான் சேவிங் சர்டிபிகேட் திட்டம் என்றால் என்ன..?

மகிலா சம்மான் சேவிங் சர்டிபிகேட் என்பது மத்திய அரசின் பட்ஜெட் 2023 அறிவிக்கப்பட்ட ஒரு முறை முதலீடு செய்யக்கூடிய புதிய சிறுசேமிப்பு திட்டமாகும். பட்ஜெட் தாக்கலின் போது இந்த திட்டத்தை அறிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் 2025 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு மகிலா சம்மான் சேவிங் சர்டிபிகேட் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வட்டி விகிதம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இரண்டு வருட காலத்திற்கு 7.5 சதவீதம் நிலையான வட்டி விகிதத்தில் பகுதி அளவு திரும்பப்பெறும் ஆப்ஷன் உடன் வருகிறது. மேலும் பெரும்பாலான பேங்க் டெபாசிட் மற்றும் தபால் அலுவலகம், மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற பிற பிரபல முதலீட்டு நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதத்தை விட இது அதிகமாகும். ஒரு பெண்ணின் பெயரில் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யப்படும் நிலையான வாய்ப்புகளுக்கு பொருத்தமான மாற்றாக மகிலா சாமான் சேவிங் சர்டிபிகேட் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நிதியாண்டில் ஒரு அக்கவுண்டில் டெபாசிட் செய்யப்படும் மொத்த தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். மேலும் சுகன்யா சம்ருதி திட்டத்திற்கு செக்ஷன் 80c -இன் கீழ் வரி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த அக்கவுண்ட் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 வருடங்களில் மெச்சூரிட்டி அடைகிறது. அக்கவுண்ட் வைத்திருப்பவர் 18 வயது அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் கல்வி நோக்கத்திற்காக அதிகபட்சம் 50% திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையே மகிலா சம்மான் சேவிங் சர்டிபிகேட் திட்டத்தின் Taxation ஸ்ட்ரக்சர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மூத்த குடிமக்கள் சார்ந்த திட்டங்கள் மற்றும் மாதாந்திர டெபாசிட் திட்டங்களுக்கான டெபாசிட் லிமிட் அதிகரிப்பதாக பட்ஜெட் தாக்கலின் போது இது அமைச்ச நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதன்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் லிமிட் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மாதாந்திர வருமானக் கழகத் திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு சிங்கிள் அக்கவுண்ட்க்கு ரூ4.5 லட்சம்  முதல் ரூ.9 லட்சம் ஆகவும் ஜாயிண்ட் அக்கவுண்டிற்கான டெபாசிட் லிமிட் ரூ.9 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும்  உயர்த்தப்பட்டுள்ளது . HelpAge India சேர்ந்த அனுபாமா தத்தா பேசியபோது, வயதான பெண்களுக்கும் மகிலா சம்மான் சேவிங் சர்டிபிகேட் திட்டத்தின் பலன் கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.