சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ்சை வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகின்றனர். இரட்டை இலை இபிஎஸ் பக்கம் சென்றதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. இதன்பின் அரசியல் ரீதியாக தனது செயல்பாடுகள் குறித்து ஓபிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.