நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 20 மணி நேரம் நீரில் தத்தளித்த ஐந்து மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாகூரை சேர்ந்த செந்தில்குமார், முகிலன் உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கடந்த 25ஆம் தேதி கோடியக்கரை மீன்பிடி தளத்திலிருந்து பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்ற போது நள்ளிரவு சமயத்தில் காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது.

இதனைத் தொடர்ந்து ஐந்து மீனவர்களும் ஐஸ்பெட்டி டீசல் கேன் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டு சுமார் 20 மணி நேரம் நீரில் தத்தளித்துள்ளனர். அப்போது அவழியாக மீன்பிடித்து விட்டு திரும்பிய ஜெகதாபட்டின மீனவர்கள் ஐவரையும் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.