அரியலூர் மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் இருங்கலாக்குறிச்சி காலனி தெருவில் வசிக்கும் சூர்யா என்பது தெரியவந்தது.

அவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபத்தில் சூர்யா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.