அரியலூர் மாவட்டத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் திருடிய திருவையாறு அம்மன் பேட்டையை சேர்ந்த தளபதி, மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான எபினேசர் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.