பஞ்சாப் இராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கமலேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இருவரின் உடலும் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.