திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 22 முதல் 28ஆம் தேதி வரை கல்யாண உற்சவம், கல்யாண பிரம்மோற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட கட்டண சேவைகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பதற்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கட்டண சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மற்றொரு நாளில் ஏழுமலையானை தரிசிக்க வாய்ப்பளிக்கப்படும். பக்தர்கள் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட டிக்கெட் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.