தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக tnpsc அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்களின் பெயர், படம், பிறந்த தேதி மற்றும் அடையாளங்களுக்கு பதிலாக ABCD முதலான எழுத்துக்களை கொண்டு குறியீடு செய்து தேர்வர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் அரசு பணியாளர் தேர்வு நடைமுறையில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.