நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் (78) நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு வந்ததாக அவருடைய மருத்துவர் நீரஜ் கூறியுள்ளார். கடந்த மாதம் அவர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது