நெல்லை மாநகரின் 45ஆவது காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர் வேலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர்தான் நெல்லை மாநகரத்தின் முதல் பெண் காவல் ஆணையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு சக காவல்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.