தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக தேர்ந்து கொண்டிருப்பவர்தான் இயக்குனர் நெல்சன். இவர் இறுதியாக ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கிய நிலையில் இந்த திரைப்படம் சுமார் 525 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளது. இந்த படத்திற்கு நெல்சன் 22 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகின்றது .

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக நெல்சனுக்கு சம்பளமாக 55 கோடி கொடுக்கவும் அந்த நிறுவனம் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் அடுத்த படத்தில்  நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.