மலையாள திரையுலகில் சின்னத்திரையிலும் வெள்ளி திரையிலும் பிரபல நடிகையாக இருந்தவர் அபர்ணா நாயர். இவர் தனது கணவர் சஞ்சித் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று மாலை 7:30 மணி அளவில் திருவனந்தபுரம் கரமனையில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தாயும் சகோதரியும் அபர்ணா நாயரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அபர்ணா நாயரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.