நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்புகளை முறையாக நடத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சௌவுரிராஜன், ஔவை பாலசுப்ரமணியன், சுப்பையன், வேதாரண்யம் நகர செயலாளர் நமச்சிவாயம் நகர துணை செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட கவுன்சிலர் திலீபன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி கோஷம் எழுப்பி உள்ளனர்.