சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் 10,500 மெட்ரிக் டன் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேரடி கொள்முதல் மையங்களை கண்காணிப்பதற்கு துணை கலெக்டர் தலைமையில் தாலுகா வாரியாக மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான  முறைகேடு செய்யப்படுவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.