விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி சீமான் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சீமானுக்கு விவசாயி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நாளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் விசாரிக்க உள்ளார். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் சீமானுக்கு இது பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.