கர்நாடகா மைசூரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது தமரசேரி பகுதியில் சென்றபோது எதிர்பாராத வகையில் சாலையில் இருந்து விலகிய பேருந்து மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ இருந்தது.

இந்நிலையில் சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதி பேருந்து மிகவும் ஆபத்தான நிலையில் நின்றது. உடனே அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறங்கினர். இவ்விபத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.