அரியானாவின் சண்டிகர் நகரில் வசித்து வரக்கூடிய தம்பதியினர் பவன் மற்றும் சுமன். இவர்களது மகள் கைபி(15), அண்மையில் அறிவிக்கப்பட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 95.2% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பார்வையற்றோர் பள்ளியில் படித்துள்ள கைபி, சிறுவயதில் சில நபர்களின் திடீர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் ஆவார். 3 வயது இருக்கும் போது ஆசிட் வீச்சில் கைபி கடுமையாக பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.