கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அற்புதமாக ஓவியம் வரையும் இவர் தனது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்திக்க வேண்டும் என்றும் தண்ணீருக்கு அடியில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் படத்தை வரைந்து உள்ளார்.

CM சார் பார்க்கணும் ஆசை என்ற பாதகையுடன் நீருக்கடியில் மூழ்கியவாறு முதல்வர் படத்தை வரைந்து முடித்துள்ளார். இவரது இந்த திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.