நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களை தவிர வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் வைக்ககூடாது என்றும், அண்ணல் அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில், தற்போது சட்ட அமைச்சர் ரகுபதியிடம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா, “நீதிமன்றங்களில் உள்ள அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது.

எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று  சென்னை உயநீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.