சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்ன விமர்சனம் வந்தாலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற மாட்டோம். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.சமீபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
‘நீட் தேர்வை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்’… அமைச்சர் உதயநிதி…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more