சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்ன விமர்சனம் வந்தாலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற மாட்டோம். மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.சமீபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது குறிப்பிடத்தக்கது.