நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கிய நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் திமுக மருத்துவரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய உதயநிதி, நீட் தேர்வின் பாதிப்பை புரிந்து கொள்ள மத்திய அரசு மறுக்கிறது. நீட் தேர்வாள் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் எனக் கூறுவது பொய். நீட் விவகாரத்தில் ஜல்லிக்கட்டு போல பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.