பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்பட தொடர் வாயிலாக உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகர் ஜானி டெப். இவர் திருமண வாழ்க்கையின் போது தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக ஆம்பர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஜானி டெப் பதில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்குகளில் ஜானிடெப் நிரபராதி என்றும் ஆம்பர் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும் சொல்லி நீதிமன்றமானது தீர்ப்பளித்தது. அதோடு அவதூறு பரப்பும் அடிப்படையில் பொய்யாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தற்காக ஆம்பர் ஹெர்ட் தன் முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாயும் (10 மில்லியன்), அபராதமாக 38 கோடி ரூபாயும் ( 5 மில்லியன்) என மொத்தம் 116 கோடி ரூபாய் (15 மில்லியன்) வழங்கவேண்டும் என கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அதன்பின் ஜானி டெப் உடனான அனைத்து வழக்குகளையும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக்கொள்ளவுள்ளதாக ஆம்பர் ஹெர்ட் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆம்பர் வழங்கவுள்ள 1 மில்லியன் டாலரை நடிகர் ஜானி டெப் “மேக் ஏ பிலிம் பவுண்டேஷன், தி பெயிண்டட் டர்ட்டில், ரெட் பெதர், டெடியரோ சோசைட்டி மற்றும் அமசோனியா பண்ட் அலயன்ஸ் போன்ற 5 தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.