பிரபல இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் சென்ற 2020-ம் வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இதுகுறித்து மும்பை காவல்துறையினர் நடத்தி வந்த விசாரணை பின் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போன்றவையும் நடிகரின் மரண வழக்கை பல கோணங்களில் விசாரித்து வருகிறது.

அண்மையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவரது உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மறைந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் அவரது முன்னாள் காதலி ரியா சக்ரவர்த்தி சமூகவலைதளத்தில் சுஷாந்த் சிங்குடன் இருக்கும் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்து நினைவுக் கூர்ந்துள்ளார். ஒரு பாறையின் மேல் இவர்கள் இரண்டு பேரும் இருக்கும் இந்த வீடியோவில் “நீ இங்கு இருந்திருந்தால்” என பதிவிட்டுள்ளார்.