பிக்பாஸ் சீசன் 6 கடந்த மாதம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி காமெடியன் அமுதவாணன் போட்டியாளராக பங்கேற்றார். அதேபோல் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியான ஜனனியும் போட்டியாளராக வந்திருந்த நிலையில், அவர் ஷோ முழுக்க அமுதவாணன் உடன் நெருக்கமாக இருந்தார். இதனிடையே அவர்கள் அண்ணன் தங்கையாக பழகுவதாக கூறினர். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யார் ஷோவுக்கு அமுதவாணன் கெஸ்ட்டாக வந்திருந்தார்.

அப்போது ஸ்ருத்திகா அவரிடம் ஒரு கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது, அமுதவாணனுக்கு திருமணம் ஆகிவிட்டதா என அவர் கேட்டார். அவருக்கு 3 பிள்ளைகளே இருக்கின்றனர் என ஷிவி கூறினார். அதனை தொடர்ந்து “நீங்க ஜனனியை love பண்றீங்கனு லைட்டா நினைத்தேன்” என அந்த நிகழ்ச்சியின் ஜட்ஜ் ஆக இருக்கும் ஸ்ருத்திகா கூற அமுதவாணன் கடும் அதிர்ச்சியானார். ஜனனி எனக்கு உடன்பிறக்காத தங்கை மாதிரி என சொல்லி விளக்கம் கொடுத்து இருக்கிறார் அமுதவாணன்.