வாக்களிக்கச் சென்ற முதியவரிடம், அவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த மருதப்பன், புதுக்கிராமத்தில் உள்ள 192ஆவது வாக்குச் சாவடிக்கு சென்றார். ஆனால், வாக்கு செலுத்த முடியாது என தேர்தல் அலுவலர் கூறியதைக் கேட்டு அதிர்ந்த அவர், பூத் சிலிப்புடன் வந்த நான் என்ன பேயா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.