இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் கார்டு புதுப்பிக்க உங்களின் ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது whatsapp மூலமாக பகிர்ந்தால் உங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை UIDAI வெளியிட்டுள்ளது. இது உங்களை ஏமாற்றும் மோசடியாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ங்களின் ஆதார் அட்டையை மக்கள் ஆன்லைனில் அல்லது அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று புதுப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் உங்களுடைய ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் மூலமாக பகிருமாறு ஒருபோதும் கேட்காது. எனவே அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் எனவும் ஆதாரை புதுப்பிக்க செப்டம்பர் 14ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.