திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் மாதத்திற்கான ஆர்சித சேவை முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நவம்பர் மாத ஸ்ரீவாரி ஆதித சேவைகளுக்கான முன்பதிவு எலக்ட்ரானிக் குழுக்கள் இன்று காலை தொடங்குகின்றது. மேலும் ஊஞ்சல் உற்சவம், அற்புத பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நவம்பர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனை டோக்கன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.