தைவான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது செவிலியர்கள் செய்த துணிச்சலான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை அங்கு பணியாற்றும் செவிலியர்கள் ஓடிச்சென்று பிடித்து காப்பாற்றியுள்ளனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்களை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலநடுக்கத்தில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.