கம்போடியாவிற்கு செல்ல விரும்பும் இந்திய குடிமக்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கம்போடியாவில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி மனித கடத்தல் காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் வேலைவாய்ப்புகளை நம்பி கம்போடியாவுக்கு வரும் இந்தியர்கள் ஆன்லைன் நிதி மோசடிகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.