திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி வேலூர் கிராமத்தில் ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜேஷ் மொபைல் ஆப் மூலம் ஆன்லைனில் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அந்த தவணை தொகை முழுவதையும் ராஜேஷ் திரும்பி செலுத்தி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் ஆன்லைன் நிதி நிறுவனத்தினர் கடன் பாக்கி இருப்பதாக கூறியதோடு, ராஜேஷின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டி வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.