மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ் நடிகர், நடிகைகள் பலரும் தாங்க முடியாத துயரத்தோடு சமூக வலைதளங்களில் மனம் திறந்து உள்ளனர். அந்தவகையில் மணிப்பூரில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நாடு வெக்கப்பட வேண்டிய சம்பவமாக உள்ளது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதைவிட வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பின்னர் தான் பிரதமர் இது குறித்து வாய்திறக்கிறார். இது எந்த அளவுக்கு நியாயம் என்பது நாட்டின் பிரதமர் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார்