காமெடி நடிகராக சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களுடைய  பிரபலமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து ஜெயிலர் உட்பட பல படங்களில் தற்போது  பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தெரிவி பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வந்தது.

யோகிபாபு முதன்முதலாக யாமிருக்க பயமேன் என்ற படத்தின் மூலமாகத்தான்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை பார்க்க யோகி பாபு தனது அம்மாளோவோடு தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது அந்த படத்தை பார்த்த அனைவரும் யோகி பாபுவை பன்னி மூஞ்சி வாயேன் என்றுதான் அழைப்பார்கள். இதைக்கேட்ட யோகி பாபுவின் தாய் தியேட்டர்களிலே கதறி அழுதுள்ளார். நீ அழகா தான் இருக்க அப்புறம் ஏன் உன்னை பன்னி மூஞ்சி வாயேன் என்று சொல்றாங்க என்று கதறி அழுத்துள்ளார். இதெல்லாம் வெறும் நகைச்சுவைக்காக தான் என் அம்மா என்று கூறி தன்னுடைய தாய்க்கு ஆறுதல் கூறியுள்ளார் யோகி பாபு.