கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஏற்கனவே ஐந்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காரணமாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.