தமிழ்நாட்டில் நாளை 12ஆம் தேதி முதல் வரும் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 சிறப்புப் பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகள் குறித்து கூடுதல் விவரங்கள் அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (12ஆம் தேதி) முதல் வரும் 14ஆம் தேதி வரை…. பொங்கலுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
குடும்பத்தோடு ஓய்வெடுக்க கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்…!!
கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்…
Read moreவாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read more