தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு சார்பில் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் தங்களது குழந்தையின் பெயரையும் அதில் சேர்த்தால் அதிக பலன்களை பெறலாம். அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்கு நீங்கள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முதலில் உங்களுடைய மாநில உணவுத்துறை இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் add member of ration card என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய விண்ணப்பம் பதிவு செய்யப்படும். விண்ணப்ப நிலையை சரி பார்ப்பதற்கு check beneficiary status என்ற விருப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் மற்றும் குழந்தையின் ஆதார்.