தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டு கள்ளு கடைகள் திறக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் ஐந்தில் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மது குடிப்பதை தடுக்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 44 ஆயிரம் கோடி வருவாய் கிடைப்பதாகவும் திமுகவினர் மதுபான தொழிற்சாலைகள் வருவாய் ஈட்டவே டாஸ்மாக் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.