தமிழகத்தில் நடைபாண்டுக்கான தேர்வு விவரங்கள் குறித்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்த வருடத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டு தாள்களுக்கான தேர்வுகளும் வருகின்ற ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்புகள் வெளியாகி ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 1500 இளநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1266 இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடைபெற உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.