கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இவருடைய ஆட்சி வந்த பிறகு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் கிருஹலட்சுமி யோஜனா திட்டம். இந்த திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும். இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு ரேஷன் கார்டு, கணவன் மனைவி இருவரின் ஆதார் கார்டு ஜெராக்ஸ், வங்கி கணக்கு புத்தகம், ஆதாரோடு இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் ஆகியவை தேவை.

ரேஷன் கார்டில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு தேதி, நேரம், இருப்பிடம் ஆகியவை அடங்கிய மெசேஜ் வரும். வழங்கப்பட்ட நாளில் சேவா கேந்திரா அல்லது பெங்களூர் ஒன் அல்லது கர்நாடகா 1 மையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். செய்தி வராவிட்டால் பதிவு செய்ய 19002 என்று எண்ணிற்கு அழைக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.