தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்ற தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நாளை 1000 ரூபாய் வந்து சேர்ந்து விடும். சரியான பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் செல்கிறதா என்பதை அறிய தற்போது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தப்படுகிறது.

அதே நேரம் தேர்தல் காரணமாக மேல்முறையீடு செய்த மகளிருக்கு இந்த மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது எனவும் அவர்களுக்கு அடுத்த மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது