தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் இரண்டு நாள் மட்டுமே இயங்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும். விடுமுறை நாட்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் முன்கூட்டியே அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.